இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை
இலங்கைசெய்திகள்

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

Share

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி கண்டி, கட்டுநாயக்க, மஹரகம தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய, மத்தள உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பஸ்கள் நடத்துனர் இன்றி பயணிக்கும். அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்தில் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்காக நடத்துனரின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததும், நடத்துனர் டிக்கெட்டுகளையும், பணத்தையும், சாரதியிடம் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு வெளியேறிவிடுவார்.

பயணச்சீட்டு வழங்காது நடத்துனர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் முன்னோடி திட்டமாக கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. இது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலமாகவும் சோதனை நடவடிக்கைகள் காரணமாகவும் பஸ்களின் நாளாந்த வருமானம் ஐந்து லட்சத்து 83 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுகின்றனவா என்பது குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...