ரணிலின் திட்டம்
இலங்கைசெய்திகள்

சகல தரப்பினருக்கும் விடுத்துள்ள அழைப்பு: ரணிலின் திட்டம்

Share

ரணிலின் திட்டம்!

இலங்கையின் பொருளாதார நிலமை செப்டெம்பர் மாதத்துக்குள் ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் (29.06.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடையும் என்று நம்புகின்றோம்.

இதற்கிடையில், தனிநபர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் வகையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் , மக்களுக்கும் தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

பரவலான விளக்கங்களை வழங்குவதன் மூலம், வர்த்தக பங்குதாரர்களுக்கு மறுசீரமைப்பின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மறுசீரமைப்பு முயற்சியின் முதன்மையான விளைவாக எதிர்பார்க்கப்படுமளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும்.

இதற்காக குறிப்பிட்டவொரு காலப்பகுதியைக் குறிப்பிட்ட முடியாது என்ற போதிலும், சில மாதங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...