3 2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி காலக்கெடு விதிப்பு

Share

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்ட கால தாமதமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை 2024 இல் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பச் செய்வதில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 2024 ஆம் ஆண்டளவில், நிலைமையின் மீது இலங்கை அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இந்த வாரம் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் 40 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று, முன்னாள் கனேடிய பிரதமர், ஸ்டீபன் ஹார்ப்பருடன் அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதலீடுகளை இலக்காகக் கொண்ட முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடிப்பதில் இலங்கையின் முதன்மை கவனம் உள்ளது என்று ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...