15
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஐ.நா கவலை

Share

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஐ.நா கவலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு அமர்வில், இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அவதானங்களை வெளியிட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் வெளியிட்டார்.

அதில், காணிகளை மீளளித்தல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் ஆரம்ப நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு அடிப்படையை வழங்க முடியும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து தாம் கவலையடைவதாக முக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், சர்வதேச கடமைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுபடும் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டை இலங்கை முன்னெடுத்துச் செல்லும் போது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் கடந்த கால மற்றும் முரண்பாடுகள் மற்றும் தண்டனையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் பரிந்துரைகளை அர்த்தமுள்ளதாக கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் மூலமும் மற்றும் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும், மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயாராக இருக்குமாறும் இலங்கைக்கு அழைப்பு கோர் குழு என்ற ஜெனீவாவின் முக்கிய நாடுகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23858849 newproject 2025 12 28t112541304
செய்திகள்உலகம்

இனி வீட்டு வேலைகளுக்கு ‘ஹுமாயுனோய்டு’ ரோபோக்கள்: சிலிக்கான் வேலியில் தீவிரமடையும் தயாரிப்புப் பணிகள்!

வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்வதற்கான மனித ரொபோக்களை தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவின் சிலிக்கன் வெலி தொழில்நுட்ப...

24632725 china
செய்திகள்உலகம்

சீனாவில் களைகட்டிய உலக இந்தி தினம்: ஷாங்காய் இந்தியத் தூதரகத்தில் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!

உலக இந்தி தினத்தை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசேட கொண்டாட்டங்கள்...

kalvi L 260112092401000000
செய்திகள்உலகம்

தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப்...

26 69631f5fb34d5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தீவிரமடையும் வைரஸ் காய்ச்சல்: கொழும்பில் சிக்குன்குனியா; நாடு முழுவதும் டெங்கு அச்சம்!

இலங்கையில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின்...