UxjhAsb31BG6teafqgAT 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆசிரியரின் மோசமான செயல் ! பல மாணவிகள் துஷ்பிரயோகம்!

Share

ஆசிரியரின் மோசமான செயல் ! பல மாணவிகள் துஷ்பிரயோகம்!

பொலன்னறுவையில் பாடசாலை மாணவிகளை ஆசிரியரொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விஜயபாபுர பிரதேசத்தில் தனியார் ஆங்கில ஆசிரியர் ஒருவரால் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை காலமும் தமது மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக 6 சிறுமிகளின் பெற்றோர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் அந்த பகுதியில் ஏராளமான சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், ஆனால் சமூகத்தின் முன் பிள்ளைகள் அவமானப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பிள்ளைகள் 12 – 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகளுக்கமைய, சந்தேகத்திற்குரிய 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தனியார் ஆங்கில ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...