download 2 1 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் இரத்ததான முகாம்!

Share
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை(17) காலை 8.30  மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஆரம்பித்தது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிர்வாகிகள், அபிவிருத்தி உதிரக்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரத்தவங்கிகளில் நிலவும்  இரத்தத்துக்கான தட்டுப்பாடு நிலையினை கருத்தில் கொண்டு குறித்த சங்கத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரத்த தான முகாம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது  சமூகப்பணியாக இது இடம்பெற்றது.
தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் இப் பணி விரைவாக ஒழுங்குபடுத்தப்பட்டவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...