download 11 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Share

மே தின பேரணிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் மாத்திரம் 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 

பேரணிகள் நடத்தப்படும் பகுதிகளில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குறித்த பணிகள் கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

மேலும், மக்களை அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில், வாகனங்களைத் தரிப்பது மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...