download 8 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

Share

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

பாடசாலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் பதினொரு வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுபொத – மூனமல்தெனிய பிரதான வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பேருந்து நிறுத்தப்பட்டதும், பல மாணவர்கள் பேருந்தின் முன் வாசல் வழியாக இறங்கினர், ஆனால் இந்த மாணவர் பேருந்தின் பின் வாசல் வழியாக இறங்கியுள்ளார்.

பேருந்து கட்டுபொதவில் இருந்து மூனமல்தெனிய நோக்கியும், சிறிய லொறி மூனமல்தெனியவிலிருந்து கட்டுபொத்த நோக்கியும் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் இருந்து இறங்கிய மாணவன் சாலையை கடக்க முன்னோக்கி சென்றபோது, ​​குறித்த சிறிய லொறி சிறுவனை மோதி தள்ளியுள்ளது. விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் தராவா குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும்,மாணவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.

குளியாபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட மொரகனே மகா வித்தியாலயத்தில் ஆறாம் (6) தரத்தில் கல்வி கற்கும் அனுக்கன்ஹேன மகுலகமவைச் சேர்ந்த ஐ.எச்.ஹிமாஷா இடுனில் என்ற பதினொரு வயது மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற லொறியின் சாரதி தமுனுவ, மொரகனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சாரதியும் வாகனமும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...