download 8 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

Share

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

பாடசாலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் பதினொரு வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுபொத – மூனமல்தெனிய பிரதான வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பேருந்து நிறுத்தப்பட்டதும், பல மாணவர்கள் பேருந்தின் முன் வாசல் வழியாக இறங்கினர், ஆனால் இந்த மாணவர் பேருந்தின் பின் வாசல் வழியாக இறங்கியுள்ளார்.

பேருந்து கட்டுபொதவில் இருந்து மூனமல்தெனிய நோக்கியும், சிறிய லொறி மூனமல்தெனியவிலிருந்து கட்டுபொத்த நோக்கியும் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் இருந்து இறங்கிய மாணவன் சாலையை கடக்க முன்னோக்கி சென்றபோது, ​​குறித்த சிறிய லொறி சிறுவனை மோதி தள்ளியுள்ளது. விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் தராவா குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும்,மாணவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.

குளியாபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட மொரகனே மகா வித்தியாலயத்தில் ஆறாம் (6) தரத்தில் கல்வி கற்கும் அனுக்கன்ஹேன மகுலகமவைச் சேர்ந்த ஐ.எச்.ஹிமாஷா இடுனில் என்ற பதினொரு வயது மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற லொறியின் சாரதி தமுனுவ, மொரகனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சாரதியும் வாகனமும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...