download 14 1 4
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக அமைப்புகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

Share

சமூக அமைப்புகளிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

தேசிய எல்லை நிருணய ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிருணய வரைவு அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதையும், அதுதொடர்பில் மக்களிடத்தே அதிருப்தி நிலவுவதையும் அவதானிக்க முடிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதுவிடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடைய ஆலோசனைகள் எவையும் பெறப்படாமலேயே இவ் எல்லை மீள் நிருணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மக்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பு, நிருவாகத் தொடர்பு, சமூக ஊடாட்டங்கள், போக்குவரத்து உள்ளிட்ட காரணிகள் கருத்திற்கொள்ளப்படாமை மாவட்டத்தின் சமூக, அரசியல் மற்றும் நிருவாக ஸ்திரத்தன்மையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பில், அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புக்கள் தங்களின் எழுத்துமூல பரிந்துரைகளை, எல்லை மீள் நிருணயக் குழுவின் மாவட்டத் தலைவரான அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு, தேசிய எல்லை நிருணய ஆணைக்குழுவின் தவிசாளருக்கு பிரதியிட்டு எதிர்வரும் 2023.04.25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைப்பதன் மூலம், உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும்- என்றார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...