000 1NF1IR
செய்திகள்இலங்கை

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

Share

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது.

அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தலைமை சாட்டையர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் , கொரோனா சிகிச்சை மையங்களின் செலவுகள், மீனவர்களுக்கு நிவாரணம், தெற்கு நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பு மற்றும் அமைச்சரவைக் கட்டடம் புதுப்பித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தேவையான குறை நிரப்பு பிரேரணையே இன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pic
உலகம்செய்திகள்

எச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு – இந்திய ஊழியர்களுக்கு ஆறுதல்!

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி (H-1B) விசா கட்டணத்தை கடந்த மாதம்...

1334083
உலகம்செய்திகள்

சென்னையில் அமோக தீபாவளி விற்பனை: பட்டாசு குப்பைகள் 151 மெட்ரிக் டன் அகற்றப்பட்டன!

தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி...

image 1843c289c1
செய்திகள்இலங்கை

5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது...

24 671602c72b24d.webp
செய்திகள்இந்தியா

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 38ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: 68 பேருக்கு அஞ்சலி!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில்  சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் 38வது நினைவு தினம் இன்று (அக்...