20230401 125915 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல் – யாழில் கண்காட்சி

Share

யாழ்.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளிலான கண்காட்சி நடத்தப்பட்டிருக்கின்றது.

குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலை வகைகள் மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான குறித்த கண்காட்சியினை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தின.

இக் கண்காட்சியில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கை மேம்படுத்துவதற்காக போஷாக்கு உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு

பாரம்பரியமான உணவு தயாரித்து வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கினை மேம்படுத்துவதற்கு உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாாி, அதிகாரி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாாி, அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதார பரிசோகர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...