sri lanka 58768
இலங்கைசெய்திகள்

போக்குவரத்தில் விசேட திட்டம்!

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மீண்டும் நாட்டை திறக்க முன்னர் பொதுப் போக்குவரத்தில் தீர்மானமிக்க வேலைத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

நாட்டில் தொற்று வேகமாக பரவ பொதுப்போக்குவரத்து சேவையே முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் நாடு மீளத் திறந்த பின் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைய வேண்டும்.

நாட்டை திறப்பதற்கு முன்னர் இந்தச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தினால் தொற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...

Untitled 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியில் நிதானம்: இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

இலங்கையில் தற்போது புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி...

Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 16
செய்திகள்விளையாட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் – 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க!

இந்தியாவின் தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம்...