download 9
இலங்கைசெய்திகள்

கேக்குகளை வாங்க வேண்டாம்!!

Share

புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கேக்குகளை வாங்க வேண்டாம் என அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து பெறப்பட்ட முட்டைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கொழும்பு துறைமுகத்திலுள்ள முட்டைகள் 7 நாட்களாக அங்கேயே இருக்கிறது. இந்த திரவ முட்டைகள் மிக வேகமாக அழுகக் கூடியவை. மேலும் அவற்றை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுவது அமைச்சரின் பொறுப்பாகும்.

குறித்த முட்டைகளை உபயோகித்து புத்தாண்டுக்கு கேக்குகளைத் தயாரிக்க வேண்டாம் என வெதுப்பக உரிமையாளர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். வெதுப்பக உரிமையாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை உபயோகித்தால் கேக்குகளை வாங்குவதைப் புறக்கணிப்போம்.

துறைமுகம் மற்றும் சுங்கம், முட்டைகளை சேமித்து வைத்து இறக்குமதி ஏற்றுமதி விதிமுறைகளை மீறியுள்ளது. எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் நிலைப்பாடு பற்றி ஆராய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என ஊடக சந்திப்பொன்றில்  அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 18
செய்திகள்இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை (Container Transport...

05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...

04 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலைகளை மூடப் போவதில்லை: வாரத்தில் 4 நாட்கள் வகுப்புகள்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை...

03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...