vijitha herath
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF கடன் – வெட்கப்பட வேண்டிய விடயம்!!

Share

எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு IMF நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை என்றும் கடன்சுமையை அதிகரிப்பதால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்ததும் மேலே வருவோம் என்று அரசாங்கம் கூறுவது நகைச்சுவையானது. கடந்த காலங்களில் ஊழல் மோசடியின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே நாடு இந்த நிலைக்கு தள்ளப்படக் காரணமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக்கொள்வது பெருமையடையும் விடயமல்ல. வெட்கப்பட வேண்டிய விடயமே.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்‌ஷவே தீர்மானித்தார். அப்போது அதன் நிபந்தனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஆனால் நிதி அமைச்சராக ரணில் வந்த பின்னரும் இன்னும் சரியாக அந்த நிபந்தனைகள் முன்வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் எரிபொருள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, எரிவாயுவிலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பன இந்த நிபந்தனைகளுக்கமையே நடந்தன.

வட்டியுடன் வழங்கும் கடனே இது. இதனை பெறுவதா? இல்லையா? என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு இணங்கியே விலைகள், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை. இப்போது நடப்பது கசாயம் என்று நஞ்சைக் குடிப்பதை போன்றது. வங்குரோத்தடைந்த நாட்டுக்கு கடன்சுமையை அதிகரிப்பதால் அதில் இருந்து தப்பிக்க முடியாது.

இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அதனை செய்துகாட்டுங்கள்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை காட்டி மக்களை மயக்கமடைய செய்து, மக்கள் உறங்கும் போது அவர்களின் உடைகளையும் கழற்றி எடுக்கும் வேலையையே செய்யப் போகின்றனர். எழுந்து பார்க்கும் போது மக்களிடம் உடைகளும் இருக்காது. இன்னும் இரண்டு வருடங்களில் அது நடக்கப் போகின்றது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...