202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

பண மோசடி – 24 பேர் கைது!

Share

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையில் பண மோசடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில்  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...