gna
செய்திகள்இலங்கை

இலங்கையில் வஹாபிசம் துடைத்தெறிப்பட வேண்டும்! – ஞானசாரர்

Share

நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஞானசார தேரர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நலன்புரி அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய வெளியீடுகள் மற்றும் ஒலி, ஒளி சாதனங்கள் என்பவையும் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாவையும் ஏனையவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துக்கின்றபோதும், விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...