1671192809 s 01
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் படகு தொடர்பில் கிடைத்த தகவல்!

Share

பாரியளவான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினர் நேற்று (14) தென் கடலில் வைத்து கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

1671192809 s 02

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையில், பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையின் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளுடன் இலங்கையை சேர்ந்த சந்தேகநபர்கள் குழுவொன்றும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தெற்கே கடற்பகுதியில் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்படைக் கப்பலான சமுதுரவுக்கு இது தொடர்பில் தகவல் கிடைத்திருந்தது.

1671192809 s 03

அதன்படி, தேவேந்திரமுனைக்கு அப்பால் ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டது..

கப்பலை சோதனையிட்ட பின்னர் 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள், சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளது.

மேலும், சமுதுர கப்பலினால் கைது செய்யப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பலுக்கு எரிபொருள் விநியோகிக்க வந்த இந்நாட்டின் மற்றுமொரு பல நாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

1671192809 s 04

1671192810 s 06

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...