air pollution 6
இலங்கைசெய்திகள்

சீராகும் காற்று மாசு!!

Share

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (08) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவது படிப்படியாக குறைவடைந்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் பல நகரங்களில், காற்றின் தரச்சுட்டெண் 95 ஐ விட குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 80 ஆகவும், குருணாகலையில் 71 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 51 ஆகவும், வவுனியாவில் 63 ஆகவும், கண்டியில் 94 ஆகவும், கேகாலையில் 83 ஆகவும், காலியில் 43 ஆகவும், இரத்தினபுரியில் 71 ஆகவும், களுத்துறையில் 71 ஆகவும் மற்றும் அம்பாந்தோட்டையில் 83 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் காற்றின் தரச்சுட்டெண் இவ்வாறு பதிவாகி இருந்தது…

பத்தரமுல்லை மற்றும் கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 114 ஆகவும், மன்னாரில் 117 ஆகவும்,

யாழ்ப்பாணத்தில் 212 ஆகவும், கம்பஹாவில் 189 ஆகவும், தம்புள்ளையில் 170 ஆகவும், கொழும்பில் 169 ஆகவும், கண்டியில் 161 ஆகவும், நீர்கொழும்பில் 170 ஆகவும், அம்பலாந்தோட்டையில் 157 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...

images 7 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முத்தையன்கட்டு அணையில் திருத்த வேலைகள்; அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்!

முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு (Tail end/Sluice Gate area) அருகில் தற்போது சிறிய அளவிலான...