1668160407 baral tanki 2
இலங்கைசெய்திகள்

‘எத்தனோல்’க்கு வரி அதிகரிப்பு

Share

எத்தனோல் இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தின் போது, ​​கிருமிநாசினி திரவ உற்பத்தியில் எத்தனோல் பயன்படுத்தப்பட்டதால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இவ்வாறு வரியை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்று காலத்தில் எத்தனோல் வரி 2020 ஏப்ரல் 30 மற்றும் 2020 ஜூன் 09 ஆகிய இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு லீற்றருக்கு 25 ரூபாவாக இருந்த வற் வரியை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 25 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளருக்கு பலன் கிடைக்காத காரணத்தினால், வரியை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...