WhatsApp Image 2022 04 02 at 3.59.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணைகிறது இ.தொ.கா!

Share

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது.

இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார்.

மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் உதவ முடியும் என தமது கட்சி கருதுவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இ.தொ.கா, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமா என வினவியதற்கு, அவ்வாறான சாத்தியக்கூறுகள் சாத்தியமில்லை என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ மீது தனக்கு மரியாதை இருக்கும் அதே வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையேயான அரசியல் தொடர்பு தற்போது முடிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...

08 20
செய்திகள்உலகம்

ஈரான் மறுப்பு: ஜனாதிபதி ட்ரம்புடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்த கருத்தை ஈரான்...

07 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச ரீதியிலான போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு...

06 19
உலகம்செய்திகள்

நியூயோர்க்கில் ஏர் கனடா விமானம் கோர விபத்து: இரு விமானிகள் உயிரிழப்பு; பயணிகள் படுகாயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா (LaGuardia) சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கனடா (Air...