food waste Ramadan 480x320 1
இலங்கைசெய்திகள்

சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு வீழ்ச்சி!

Share

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அதிகமாக உணவு தயாரிப்பில் ஈடுபடாமையும் இதற்கு காரணமாகும்.

மேல் மாகாணத்தில் கடந்த வருடங்களில் நாளாந்தம் 300 மெட்ரிக் தொன் உணவுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 180 மெட்ரிக் தொன் உணவுக்கழிவுகளே சேகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உணவுக்கழிவுகளில் இருந்து சேதனப் பசளையை தயாரித்து வழங்க முடியும் எனவும் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...