WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

குறுகிய கொள்கையுடையோருடன் இணையோம்!

Share

” குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக செயற்படும் கட்சிகளுடன் இனி கூட்டணி வைத்துக்கொள்ளப்படமாட்டாது.” – என்று ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கம் மாறினாலும் தேசியகொள்கையென்பது மாறக்கூடாது. ஆனால் எமது நாட்டில் அந்த கொள்கை மாறுவதே நெருக்கடி நிலைமைக்கு ஓர் காரணமாகும். எமது திட்டங்களை குழப்பியடித்தவர்கள் இன்று வெளியேறிவிட்டனர்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டும், நாடாளுமன்ற ஆசன இருப்புக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வரும் கட்சிகளும் எமது அணியில் இனி இடமில்லை.

நாட்டின் எதிர்காலம் கருதி, எமது கொள்கைகளை ஏற்கக்கூடியவர்கள் இணையலாம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...