Mahindanatha aluthkamake
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா போன்ற ஒருவரை வரலாற்றில் காண முடியாது!

Share

” கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் நடத்தவில்லை. ஜனாதிபதிக்கான செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இப்படியானதொரு அரச தலைவரை இனி கண்டுபிடிப்பது கடினம். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள், அந்த முடிவு தொடர்பில் மரணிக்கும் தருவாயிலாவது கவலை அடைவார்கள்.

கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இனி அரசியலுக்குள் வரும் எண்ணம் அவருக்கு இல்லை.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...