pfizer. 6785678
இலங்கைசெய்திகள்

உயிர்களுடன் விளையாட வேண்டாம்- சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

Share

கொரோனா நோய்க்கு (COVID 19) எதிரான தடுப்பூசிகளில் pfizer m RNA தடுப்பூசியானது உரிய முறையில் -60C தொடக்கம் -90 C பேணப்பட்டால் அதனுடைய ஆயுள் காலம் 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம் என்பதை உரிய ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டதாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளிவல்லிபுர நாதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) நிறுவனத்தாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும் (WHO ) ஏற்றுக் கொள்ளப்பட்டு அமெரிக்கா முதலான உலகின் பல நாடுகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசியின் விலை 19.5 அமெரிக்க டொலர் அல்லது இலங்கை ரூபாய்களில் 7000 ஆகும். உலக சுகாதார ஸ்தாபனம் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கோடிக்கணக்கில் செலவழித்து கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக இலங்கை போன்ற வறிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக தருவித்து இருக்கிறது.

வடக்கில் குறிப்பாக வன்னி பகுதியில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் வீதம் குறைவாக இருப்பதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலர் ஒரு தடவை கூட தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் அறிவுறுத்தப்பட்டது போல் வடக்கிலும் ஆயுள் காலம் நீடிக்கப்பட்ட pfizer m RNA தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களுக்கும் விபரங்கள் சுகாதார திணைக்களத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டு இருந்தது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க பொறுப்பு வாய்ந்த மருத்துவர்களையோ, துறைசார் மருத்துவ நிபுணர்களையோ கலந்தாலோசிக்காது அல்லது ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை ஆராயாது சில தமிழ் ஊடகங்கள் வேண்டுமென்றே ஏனைய மாகாணங்களில் நிராகரிக்கப்பட்ட காலாவதியான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சிங்கள மருத்துவர் பாடசாலை மாணவர்களை பலவந்தப்படுத்துவதாக விஷமத்தனமான இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் முன்னர் கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத நிலையில் அவர்களுக்கு இப்போது இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கனடா உட்பட பல நாடுகளில் தற்போது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடக்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற நிலையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...