dalasRER
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிந்தால் கட்சியில் இருந்து நீக்கட்டும்! – டலஸ் சவால்

Share

” உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்.”

இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியவை வருமாறு,

” நாட்டில் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. ஆனால் இராஜாங்க அமைச்சு நியமனம் இடம்பெறுகின்றது. என்ன நடக்கின்றதென தெரியவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அநாதவராக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவே நாம் புதிய அரசியல் சக்தியை உருவாக்கியுள்ளோம். எமது முடிவில் எந்த தவறும் இல்லை.

கட்சியை விட்டு நீக்கினால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். முடிந்தால் நீக்கி காட்டுமாறு சவாலும் விடுக்கின்றோம். ஏனெனில் உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாங்கள்தான். கட்சிகளின் தனித்தும் மற்றும் கொள்கைக்காக நாமே முன்னிலையாகியுள்ளோம்.” – என்றார்.

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....