Rajapaksa 2021.10.06 768x401 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்தவருக்கு அமைச்சு பதவி!

Share

மக்கள் எழுச்சியால் பதவிகளை துறந்து, தீவிர செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜபக்சக்கள் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷசீந்ர ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மக்கள் எழுச்சியால் ஜனாதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளார். பாதுகாப்பு உட்பட அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துகொடுத்துள்ளது.

பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்சவும், செயற்பாட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.

அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை வழங்குமாறு ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...