WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம்!- கூறுகிறார் தயாசிறி

Share

கட்சியின் யாப்பு திருத்தம் ஊடாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அக் கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

கட்சிக்குள் எல்லை கடந்த சுதந்திரம் இருப்பதாலேயே கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக உறுப்பினர்களால் சட்ட நடவடிக்கை நோக்கி நகர முடிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசாங்கம் அமையாவிட்டால், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை என்ற முடிவை கட்சி எடுத்திருந்தது. அதனைமீறி உறுப்பினர்கள் செயற்பட்டனர். கடையில் கட்சிக்கு எதிராகவே நீதிமன்றத்தை நாடினர். சுரேன் ராகவன், சாந்த பண்டார ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. நிமல், அமரவீர போன்றவர்கள் நீக்கப்படவில்லை. இப்படி பாகுபாடு காட்ட முடியாது. எனவே ,கட்சியின் நலன் கருதியே யாப்பு திருத்தம் செய்யப்பட்டது.

குமார வெல்கம போன்றவர்கள்தான் சுதந்திரக் கட்சியை கூறுபோட்டனர். ” – என்றார் தயாசிறி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...