884255 corona deaths
செய்திகள்இலங்கை

கொவிட் நோயாளர்கள் தப்பியோட்டம் – 32 பேருக்கு தொற்று உறுதி!

Share

வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த மூவரும் மருத்துவமனையில் தங்கிச்செல்லாமல் தப்பிச்சென்றிருந்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதாரப் பிரிவினர் குறித்த கிராமத்தில் தேடுதல் நடத்தி ஏழு பேரை தனிமைப்படுத்தியிருந்தனர் எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதனை பின்பற்றாது வெளியில் சுற்றித்திரிந்துள்ளனர்.

இது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமத்தை சேர்ந்த 150 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...