ஜோதிடம்
நினைத்தவை நடக்க ‘ஸ்ரீ ராம ஜெயம்’
சொல்லின் செல்வன் என அனுமன் அழைக்கப்படுகிறார். கம்பராமாயணத்தில் பல்வேறு சூழலில் அனுமனின் கூற்றாக கூறப்படும் நிகழ்வில், அனுமனின் வார்த்தை உபயோகம் ஆச்சரியப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். அதில் அனுமன் உபயோகித்த ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற வார்த்தையும் ஒன்று.
அனுமன் கூரிய ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையே மந்திரமானது. பல தருணங்களில் சீதா தேவி, ராமனின் மன நிலையைப் போல மனம் சஞ்சலத்துடன், கணமாக இருக்கும் போது மிக எளிய ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதாலும், ஒரு காகிகத்தில் எழுதுவதால் நம் மனம் நிம்மதி அடையும்.
உலகிலேயே மிக எளிய மந்திரமும், சக்தி வாய்ந்த மந்திரமாகா ‘ராமா’ என்ற மந்திரம் விளங்குகிறது.
அனுமன் ‘ராம’ என்ற நாமத்தை 33 கோடி முறை ஜெபித்துள்ளதாகவும், அதுவும் எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் நாமத்தை உச்சரித்ததால், இன்றும் நம்முடன் சிரஞ்சீவியாக இருக்கிறார். சிரஞ்சீவி என போற்றப்படுகிறார்.
ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜெயம் சேர்க்கப்பட்டு ராம ஜெயம் என உச்சரிக்கப்படுகிறது.
‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திரம் ஒருவனுக்கு வெற்றியை மட்டும் தராமல், அவரின் வாழ்வில் தடங்கல் செய்யக்கூடிய எதிரிகளை அவர்களின் வாழ்விலிருந்து நிக்கி நாம் எதிர்பார்த்த வெற்றியை தரக்கூடியதால், நாம் அனுதினமும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்ற மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை எப்போதும் மூச்சுக் காற்றைப் போல உச்சரித்துக் கொண்டே இருங்கள்.
ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்!! ஸ்ரீராம ஜெயம் !
You must be logged in to post a comment Login