273 repaired SLTB buses added to fleet under Presidents patronage
இலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைப்பு

Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

மேலும், இதற்கு முன்னர் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தில் இருந்து 10 சதவீதத்தினை குறைத்தல் மற்றும், அண்மையில் திருத்தப்பட்ட டீசல் விலையை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 38 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய திருத்தப்பட்ட கட்டணங்கள் நள்ளிரவு முதல் அறவிடப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமையான பேருந்து சேவைகளுக்கு மாத்திரமே இவ்வாறு பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. சிசு செரிய மாகாண பேருந்துகள், கெமி செரிய காலை மற்றும் இரவு விசேட பேருந்துகள் மற்றும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பொது பாடசாலை சேவை பேருந்துகளுக்கும் இக்கட்டண திருத்தம் பொருந்தும் .

புதிய கட்டணத்திருத்தங்களுக்கு அமைவாக கட்டணங்கள் அறவிடப்படுகின்றதா என பரிசோதிப்பதற்காக நடமாடும் பரிசோதகர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏதேனுமொரு வகையில் பற்றுச்சீட்டுகளை வழங்காமை அல்லது அதிக கட்டணத்தினை அறவிடின் 1955 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம் – எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...