z p01 Lalkantha
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு செல்வதே சிறந்தது!

Share

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடி ஆகிய இரண்டையும் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே சரியான தீர்வாக இருக்கும். தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சமூகத்திற்கு வாய்ப்பளிப்பதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்துறை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள வேண்டுமானால் முதலில் நாட்டின் அரசியலை ஸ்திரப்படுத்த வேண்டும். அரசியலை ஸ்திரப்படுத்த, சமூகத்தை ஸ்திரப்படுத்துவது அவசியம். சமூகம் ஸ்திரமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாமல் அடக்குமுறை மூலம் சமூகத்தை ஸ்திரப்படுத்தவும், ஆட்சியாளர்களை பாதுகாக்கும் சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக அரசியலை ஸ்திரப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீண் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தான் இப்போது செய்ய வேண்டும். எனவே அதனை வற்புறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் லால்காந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...