lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் ஆணையை பெற்ற அரசே நாட்டுக்கு தேவை!

Share

” மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால சட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, எதிரணி பிரதம கொறடாவான லஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

” குதிரை ஓடிய பிறகு கடிவாளம் பூட்டுவதுபோலவே, சர்வக்கட்சி அரசுக்கான கோரிக்கையை அரசு விடுத்துள்ளது. தற்போது காலம் கடந்துவிட்டது. முன்கூட்டியே செய்திருக்க வேண்டியதொன்றை, காலம் கடந்த பின்னர் செயற்வதற்கு முற்படுகின்றனர்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

” சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி, தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றார்.” – எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...