SriLanka2
அரசியல்இலங்கைசெய்திகள்

துப்பாக்கிகள் திருட்டு! – ஜனாதிபதி மாளிகையில் கைரேகைகள் சேர்ப்பு

Share

நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு அருகில் அண்மையில் ஏற்பட்ட கடும் பதற்ற சூழ்நிலையின் போது பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

காணாமல் போன துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களின் கைரேகைகள் அனைத்தையும் பொலிஸார் பெற்று அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

எதிர்கால பயன்பாட்டிற்காக அவை பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...