law
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Share

யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை அவர்களின் இரண்டு படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பன அரச உடமையாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து நீதவான் 11 மீனவர்களையும் இன்றைய தினம் வெள்ளிககிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 11 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , அவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை அரச உடமையாக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...