viber image 2022 07 12 11 39 39 897 1
இந்தியாசெய்திகள்

திமிங்கலம் வடிவிலான விமானம் சென்னையில்!

Share

மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் பெலுகா விமானம், முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.

நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு, ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான அலுவலகம், பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணியர் விமானம் உட்பட, சரக்கு விமானங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், பல்வேறு வடிவிலான பெரிய ரக பொருட்கள் என, 47 ஆயிரம் கிலோ வரை ஏற்றிச் செல்லும் வகையில், திமிங்கலம் வடிவிலான ‘சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர்’ என்ற பெலுகா சரக்கு விமானத்தை, 1995ல் ஏர்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த விமானம், முதல் முதலாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:ஏர்பஸ் பெலுகா சரக்கு விமானம், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, சென்னைக்கு நேற்று காலை எரிபொருள் நிரப்ப வந்தது. இந்த வகை பெரிய சரக்கு விமானம், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை.எரிபொருள் நிரப்பிய பின், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் முக்கிய நகரான பட்டாயாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....