Dhammika Perera 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோ ஹோம் ரணில் – தம்மிக்க பெரேரா முழக்கம்!

Share

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.” – என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார்.

டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம் ரணிலிடம் இல்லை எனவும், நிதி அமைச்சராக அவர் முன்னெடுக்கும் ‘அரசியல் கேமும்’ நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை ரணில் தடுத்து வருகின்றார், நாட்டு மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கான திட்டமும் அவரிடம் இல்லையெனவும் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.

எனவே, பிரச்சினைகளுக்கு மத்தியில் பயணிக்காமல், நிதி அமைச்சு பதவியை ரணில் விக்கிரமசிங்க துறக்க வேண்டும் என்றார் அமைச்சர் தம்மிக்க.

அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டமானது, நாட்டுக்கு டொலர்களை திரட்டுவதற்கான வழிமுறைகளை காண்பிக்கும் போராட்டமாக அமைய வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...