Flag of Italy.svg
உலகம்செய்திகள்

வரட்சியால் இத்தாலியில் அவசரநிலைப் பிரகடனம்!

Share

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் போ நதியைச் சூழவுள்ள ஐந்து வடக்கு பிராந்தியங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பற்றாக்குறையை கையாள்வதற்காக இந்தப் பிராந்தியங்களுக்கு 38 மில்லியன் டொலர் அவசர நிதி வழங்கப்படுவதாகவும் இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வரட்சி இத்தாலியின் 30 வீதத்துக்கும் அதிகமான விவசாய உற்பத்திகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு விவசாய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பங்கீட்டு முறையில் நீரை விநியோகிப்பது குறித்து பல மாநகர சபைகளும் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

குளிர் மற்றும் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான சூடான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைவீழ்ச்சி வடக்கு இத்தாலியில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலை அசாதாரண முறையிலும் அதிகாரங்களைக் கொண்டும் நிர்வகிப்பதற்காகவுமே அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக இத்தாலி அரசு குறிப்பிட்டுள்ளது.

#WorldNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...