images 1
இலங்கைசெய்திகள்

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில்!

Share

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

யாழ். மாவட்டத்தில் கடமையில் ஈடுபடும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சில பிரதேச செயலகங்களில் எரிபொருள் வழங்களின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்திற்கான ஒழுங்குபடுத்தல் பணிகளில் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளபோதும், அவர்களின் கீழ் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைத் தேவையினை கருத்துகொள்ளாது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டமை தொடர்பாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது.

எனவே இதனை கண்டித்தும் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்களின் போது உரிய பொறிமுறையினை பின்பற்றி, எமது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகம் சீராகும் வரை நாளை 04 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 07 03 at 6.04.09 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...