newsss
இலங்கைசெய்திகள்

குருநகர் வாள்வெட்டு – அறுவர் சரணடைவு

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த 6 பேர் இன்றைய தினம் பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

படுகாயமடைந்து உயிரிழந்த இளைஞனை திட்டமிட்டு தந்திரமாக அழைத்து வாள்வெட்டு நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெமி என அழைக்கப்படும் குழுவினரே தமது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் தலைமறைவாக முயன்றும் இனி தப்ப முடியாதென்ற நிலையில், சட்டத்தரணி ஒருவர் ஊடாக 6 பேர் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...