coronavirus curfew roablock sri lanka lg 2
இலங்கைசெய்திகள்

முடங்குகிறது நாடு? -அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே எரிபொருள்

Share

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கு தேவையான எரிபொருள் மாத்திரமே விநியோகிக்கப்படும் எனவும் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கம் என பெயரிடப்பட்டுள்ள அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (07) மாலை நடைபெற்றது.

இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், அவசர ஊடக சந்திப்பொன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.

” இன்று நள்ளிரவு முதல் ஜுலை 10 ஆம் திகதிவரை நாட்டில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். துறைமுகம், சுகாதாரம், உணவு விநியோகத்துக்கான போக்குவரத்து, விவசாய நடவடிக்கைக்கான தேவைப்பாடுகள், சுற்றுலாத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்படும்.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன், ஏனையோர் வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம் எனவும், அத்தியாவசிய சேவைகள் முடங்காமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல கிராமியபுற பாடசாலைகள் இயங்கும், ஏனையவை 10 ஆம் திகதிவரை மூடப்படும்.

உள்ளக போக்குவரத்து இடம்பெற்றாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் உள்ளக போக்குவரத்துக்கான எரிபொருள் இ.போ.ச. ஊடாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு எரிபொருள் மற்றும் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.

” இது லொக்டவுன் அல்ல. 10 ஆம் திகதிவரை வீடுகளில் இருந்து பணிகளை முன்னெடுக்கலாம். கடைகள், பாமசிகள் திறந்திருக்கும். ஜுலை 10 ஆம் திகதிக்கு பிறகு நாடு வழமைபோல இயங்கும்.” – என்று அமைச்சர் ஹரின் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2Fr9gvVk5thEx6gS4iJLDh
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டப் பாவனையாளர் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...

images 1 8
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள்: துப்பாக்கி உரிமம் மற்றும் போராட்டங்களுக்குக் கடும் தடை!

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில...

1712855747
செய்திகள்உலகம்

ஜப்பானின் அணு ஆயுத இலட்சியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் – வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்,...

articles2F2sWN4GIo004Rm34vnB0h
செய்திகள்அரசியல்இலங்கை

தரமற்ற தடுப்பூசிகளால் இருவர் பலி – சஜித் பிரேமதாச அம்பலம்!

குமட்டல் மற்றும் வாந்திக்காக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நச்சுத்தன்மை அடைந்ததால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த...