srikantha
இலங்கைசெய்திகள்

மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது! – சட்டத்தரணி ஸ்ரீகாந்தா கண்டனம்

Share

கிளிநொச்சியில், சுகாதாரப் பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் தமது கடமைக்கு ஒழுங்காகவும், உரிய நேரத்திலும் சமூகம் அளிப்பது மிகவும் அவசியமானது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
இருந்தும், இந்த உண்மையை உணர்ந்துகொள்ள மறுக்கும் நபர்கள் சிலர், அங்கும் இங்குமாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பது அப்பட்டமான சமூக விரோத நடவடிக்கை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியே ஆக வேண்டும்.

ஒரு சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளால், வடக்கில் சுகாதார பணியாளர்கள் ஒரு சில மணித்தியாளயங்கள் கூட, தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கி, சுகாதார சேவை செயல் இழக்குமானால், வைத்தியசாலைகளை நாடி நிற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நேயாளிகளின் கதி, இன்றைய நெருக்கடி நிலையில் என்னாகும் என்பதை இத்தகைய நபர்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், இப்போதெல்லாம் எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் ஒழுங்கீனங்களை தட்டிக் கேட்க சகலருக்கும் உரிமை உண்டு என்பதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. ஆனால், முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோக ஏற்பாடுகளில் எவரும் தலையிட்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

கிளிநொச்சியில் அரங்கேறிய சம்பவம் போன்ற நிலைமைகள் எங்கே ஏற்பட்டாலும், அந்த இடங்களில் இருக்கக் கூடிய இளைஞர்கள் சமூகப் பொறுப்புடன் துணிந்து செயற்பட்டு, அடாவடித்தனத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஒருபோதும் தயங்கக் கூடாது. சட்டம் கூட அதனை அனுமதிக்கின்றது.

கிளிநொச்சி சம்பவத்திற்காக, அதில் பாதிக்கப்பட்ட சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு எமது மனவருத்தத்தை நாம் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவை வழங்க தீர்மானித்திருக்கின்றோம் என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....