IMG 20220619 WA0166
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழிப்பறி கொள்ளை! – இருவர் மடக்கிப் பிடிப்பு

Share

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி – வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இறைச்சி வியாபாரி ஒருவரின் 3 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புத்தூர் பகுதியில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர், வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.

சாமர்த்தியமாக செயற்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்து நையப்புடைத்தார். பின்னர் குறித்த பிரதான வீதியில் பயணித்த நபர்களும் பிடிபட்ட இளைஞனை முறையாக கவனித்தனர்.

தப்பிச்சென்ற இன்னொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக அப்போது இளைஞர்களினால் பிடிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த இளைஞனின் மர்ம உறுப்பு பகுதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது

வீதியில் வைத்து இளைஞர்கள் முறையாக கவனிக்கப்பட்ட பின்னர் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் இருவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன....

1637156252 Damgates 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!

கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம்...

25 688e9a504bdbd
அரசியல்இலங்கைசெய்திகள்

கல்விச் சுமை குறைப்பு, மனநலனுக்கு முன்னுரிமை: நுவரெலியா கல்வி அதிகாரிகளுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்!

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை...

1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...