மனோ கணேசன்
செய்திகள்இலங்கை

நாமலின் ருவிற்றர் பதிவுக்கு மனோ கணேசன் பதிலடி!!

Share

நாமலின் ருவிற்றர் பதிவுக்கு மனோ கணேசன் பதிலடி!!

.’தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள்’ இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்தபோதே மனோ கணேசன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ச தனது ருவிற்றர் தளத்தில் இதனைப் பதிவிட்டிருந்தார்.

இலங்கைக்கு மீள வருகைதரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே மனோ கணேசன், யாழ்ப்பாணம் வலி-வடக்கில் பலாலி உட்பட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம் மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...