namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் அரசியலுக்கு முடிவுகட்ட முடியாது! – நாமல் வீறாப்பு

Share

“ராஜபக்சக்கள் தத்தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் பதவிகளிலிருந்து விலகலாம். ஆனால், அவர்களின் அரசியலுக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது” – என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“மே 09ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார் என்றும், ஜூன் 09ஆம் திகதி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ச விலகினார் என்றும், எனவே ஜுலை 09ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகக்கூடும் என்றும், ராஜபக்சக்களின் அரசியல் முடிவுக்கு வருகின்றது என்றும் சமூக ஊடகங்களில் சில பதிவுகளைப் பார்த்தேன். சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட இந்தப் பதிவுகளை இட்டுள்ளனர்.

இவ்வாறு பதிவுகளை இடுவோர் ஒன்றை மாத்திரம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதாவது, ராஜபக்சக்கள் தத்தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் பதவிகளிலிருந்து விலகலாம். ஆனால், அவர்களின் அரசியலுக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ராஜபக்சக்களின் அரசியல் பயணம் தொடரும். அந்தப் பயணத்தை எவரும் தடுத்துநிறுத்த முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக தற்போதும் மஹிந்த ராஜபக்சவே பதவி வகிக்கின்றார். எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவுள்ளது. நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிதான் பெரும்பான்மைப் பலத்துடன் உள்ளது” – என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...