death
செய்திகள்இலங்கை

கொரோனாவால் 22 வயது பெண் சாவு! – பருத்தித்துறையில் சம்பவம்

Share

பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிரிழந்த 22 வயது இளம் பெண் உட்பட இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் மூன்று நாள்களாகக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

சுவாசிப்பதற்குச் சிரமப்பட்ட நிலையில், இன்று காலை  மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆயினும் மருத்துவர் பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுப் பெண்ணொருவர் மந்திகை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டுவரப்பட்டார்.

அவர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...