9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நானாட்டான் பிரதேசத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

Share

மன்னார் மாவட்டத்தில், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் சுனாமி ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

அச்சங்குளம், அருகங்குண்று போன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில் எதிர்காலத்தில் சுனாமி தொடர்பான அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது குறித்த அனர்த்தங்களில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும், அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வு இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகங்கள், இராணுவம், பொலிஸ், வேல்ட் விஷன், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, சென். ஜோன் அம்புலன்ஸ், செஞ்சிலுவைச் சங்கங்கள் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஒத்திகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்தகுமார் உட்பட வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...