20220601 095248 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பொது நூலகம் எரிப்பின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Share

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தை உருவாக்குவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், பிரதி மேயர் து.ஈசன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ். பொது நூலக பிரதம நூலகர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகம்1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து வந்த வன்முறைக் குழுவொன்றால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் அது திகழ்ந்தது.

VideoCapture 20220601 103051 1

VideoCapture 20220601 103055 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...