2 இளைஞர்கள் மரணம்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிக போதைப்பொருள் பாவனையால் மன்னாரில் 2 இளைஞர்கள் சாவு!

Share

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக மன்னாரில் இரு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேசாலையைச் சேர்ந்த வித்திராஸ் மௌசாட் (வயது – 35), தலைமன்னாரைச் சேர்ந்த மகேந்திரன் பிரதீப் (வயது – 26) ஆகிய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திடீர் சுகயீனமடைந்துள்ளனர் என்று தெரிவித்து மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் அனுமதிக்க முன்பே உயிரிழந்துவிட்டனர் என்று வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஒரு வாகனத்தில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணிக்க முற்பட்ட வேளை நோய்வாய்ப்பட்டனர் என்று தெரிவித்து மேற்படி இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அதிக போதைப்பொருள் பாவனையே மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தில் இருந்த எஞ்சிய இருவரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதேவேளை, உயிரிழந்த இருவரினதும் பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...