பாத்திமா ஆயிஷா
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீரில் மூழ்கடிக்கப்பட்டே ஆயிஷா படுகொலை! – பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

Share

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான இருவரில் 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாகத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேகநபர்களையும் இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...