கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் மூவர் கைது!

Share

இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் நீர்கொழும்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் நேற்றுக் காலை நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மற்றுமொரு சந்தேகநபர் நீர்கொழும்பு பஸ் ரிப்பிட பகுதியில் நேற்றுப் பிற்பகல் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவரை நீர்கொழும்பு – ரமணி மாவத்தையில் வைத்து நேற்றிரவு பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதானவர்கள் நீர்கொழும்பு மற்றும் மருதானைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 184
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைப்பு: மின்சார உற்பத்தி முடிவால் குடிநீர் விநியோகம் பாதிப்பு!

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து வழக்கத்திற்கு மாறான முறையில் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால்,...

world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...